கல்லூரி மாணவரை கல்லால் தாக்கிக் கொல்ல முயற்சி-3 பேருக்கு வலைவீச்சு..!

கோவை இடையர்பாளையம் சௌடாம்பிகா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்சங்கர் (வயது 20) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம், சி .ஏ, மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் லிங்கேஸ்வரனுடன் அறையில் தங்கி இருந்தார் .அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் குடிபோதையில் அங்கு வந்தனர். அவர்கள் சங்கரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை கல்லால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டனர் .இதில் சங்கர் படுகாயம் அடைந்தார்  அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.