கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 9வயது சிறுமி. அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தேவராஜ் (வயது 39) என்பவர்அந்த சிறுமியை ஆசை வாரத்தை காட்டி அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் கூறினார். உடனே அவரது தாயார் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கற்பகம் தேவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. ஒருவர் கைது…
