உக்கடம் புதிய மேம்பாலம் – வரும் 9 ந் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!!

உக்கடம் புதிய மேம்பாலம்முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 – ந்தேதி திறக்கிறார்.

கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் ரூ 480 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து வாலாங்குளம் பகுதியில் இறங்குதளம் அமைக்கும் பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது .உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மற்றும் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மேம்பாலம் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து விட்டது. இந்த பகுதியை போக்குவரத்துக்கு திறந்து விடலாம் என்று நெடுஞ்சாலை துறை சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்கடம் புதிய மேம்பாலத்தை வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக அன்று காலையில் விமானம் மூலம் கோவை வருகிறார் .விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.பின்னர் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.