நின்ற லாரி மீது வேன் மோதல் – டிரைவர் பரிதாப பலி..

கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் தம்புரான் ( வயது 36) வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை – சேலம் ரோட்டில் வேன் ஓட்டிச் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் அருகே எந்தவித சிக்னலும் போடாமல் நிறுத்தி இருந்த லாரி மீது இவரது வேன் மீது மோதியது. இதில் வேன் நொறுங்கியது. அதே இடத்தில் டிரைவர் தம்புரான் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக லாரி டிரைவர் அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.