மாணவியிடம் சில்மிஷம் .முன்னாள் தி.மு.க கவுன்சிலர் போக்சோவில் கைது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11- ஆம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க கவுன்சிலரான64 வயது முதியவர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் அந்த சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது .இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடினார்.அவர் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோவை மத்திய பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னாள் கவுன்சிலரான 64 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்..நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.