விஸ்வரூபம் எடுத்தது பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோ விவகாரம்… 2 கோவை சப்- இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்.!!

கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். அதே காவல் நிலையத்தில் சிறப்பு பணியாற்றி வந்தவர் அகஸ்டின். வழக்கு ஒன்று தொடர்புடைய ஒருவரி டம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் செல்போன் ஆடியோ விவகாரம் உண்மை என்பது தெரிய வந்தது . இதற்கு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டனும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் 2 பேரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர். மேலும் அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட்) செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்..