வயநாடு நிலச்சரிவு… காணாமல் போனவர்களை 10வது நாளாக தேடும் பணி தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி 10வது நாளாக தொடர்ந்து வருகிறது.

நேற்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சன்ரைஸ் பள்ளத்தாக்கில் இன்று மேலதிக சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை 6 மண்டலங்களாக பிரித்து தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவில் இதுவரை 413 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.