வயநாடு நிலச்சரிவு… கேரளாவுக்கு தமிழக அரசு ரு.5 கோடி நிதி உதவி.!!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட பகுதி மக்களுக்கு உதவி செய்வதற்கு தமிழ்நாடு அரசு ரு 5 கோடி நிதி உதவி வழங்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தீயணைப்பபடையினர், மருத்துவர்கள் அடங்கிய குழு கேரளா செல்கிறது 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் இந்த குழுக்கள் செயல் படுகிறது.கேரள சேத விவரங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேரளா முதலமைச்சரிடம் தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வயநாடு செல்கிறார்..