இது என்னங்கடா! பிரியாணி போட்டிக்கு வந்த சோதனை!! ஓட்டல் மேனேஜர் மீது பாய்ந்தது வழக்கு.!!

கோவை ரயில் நிலைய வளாகத்தில் ரயில் பெட்டி வடிவம் கொண்ட ஓட்டல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 5 பிரியாணி சாப்பிட்டால் ரூ 50, ஆயிரம் பரிசு, 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ 1 லட்சம் பரிசு என்று அறிவிப்பு விடப்பட்டது . இதை பார்த்து ஏராளமானவர்கள் அந்த ஓட்டல் முன் குவிந்தனர் . இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒட்டல் மேனேஜர் கணேஷ் மீது வழக்கு பதிவு செய்தார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது..