என்னது!! ஒரே பதிவு எண்ணில் மூன்று பேருந்துகள் – சமூக வலைத்தளங்களில் வைரல்.!!

மிழக அரசு சார்பில் ‘த.நா. 74 என் 1813’ என்ற ஒரே பதிவு எண்ணில் மூன்று தோற்றத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அந்த மூன்று பேருந்துகளின் படங்களும் நேற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, ‘த.நா. 74 என் 1813’ என்ற இந்த பேருந்து 8-2-2017 அன்று புதிய பேருந்தாக கூண்டு கட்டி 9-3-2017 முதல் புறநகர் பேருந்தாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் தடத்தில் இயக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து இந்த பேருந்துக்கு பதில் புதிய பேருந்து இயக்கப்பட்டதால், 4-1-2020 முதல் இது நகர பேருந்தாக இயக்கப்பட்டது.

இந்த பேருந்தின் வயது 6-ஐ கடந்த நிலையில் அரசாணைப்படி கடந்த 7-10-2023 அன்று இதன் கூண்டு புதுப்பிக்கப்பட்டு நகர பெருந்தகை நாகர்கோவில்-மேல் மிடாலம் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கொடுத்துள்ள இந்த விளக்கத்தின் மூலம் ஒரே பதிவு எண் கொண்ட இந்த ஒரே பேருந்து, மூன்று கட்டங்களில், மூன்று தோற்றத்தில், மூன்று வழித்தடத்தில் ஓடியது தெரியவந்துள்ளது.