ஏய்!! யாருகிட்ட வந்து வாடகை கேட்கற… வாடகை பாக்கி கேட்ட கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு – கறிக்கடைக்காரர் கைது..!

கோவை சிங்காநல்லூர், காமராஜர் ரோட்டில் உள்ள சுப்பையா லேஅவுட்டை சேர்ந்தவர் தமிழரசு ( வயது 56)பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்து வருகிறார்.நீலி கோணாம்பாளையம் அங்கம்மாள்லேஅவுட்டில் உள்ள இவரது கட்டிடத்தில் சிங்காநல்லூர் ராமானுஜம் நகரை சேர்ந்த மணிகண்டன் ( வயது 45 ) என்பவர் வாடகைக்கு மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் சரிவர வாடகை கொடுப்பதில்லை. நேற்று தமிழரசு மணிகண்டனிடம் வாடகை பாக்கி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அரிவாளால் தமிழரசுவை வெட்டினார் .இதில் இவரது இடது கையில் காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து . சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து மட்டன் வியாபாரி மணிகண்டனை கைது செய்தார் .இவர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..