கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூர் ஏ.பி.எஸ் .நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் .இவரது மனைவி சரண்யா பிரியதர்ஷினி ( வயது 34)இவர்களுக்கு அக்ஷயா பிரிதி ( வயது 11) அஜய் வெங்கட் ( வயது 8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.ராமலிங்கம் நேற்று தனது மனைவி, 2 குழந்தைகளுடன் பைக்கில் பொள்ளாச்சி- அம்பராம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார.ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென்று பைக்கில் இருந்து நிலை தடுமாறி 4 பேரும் கீழே விழுந்தனர்.அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரண்யா பிரியதர்ஷினி நேற்று இறந்தார் . கணவர் ராமலிங்கமும் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் . இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது .இன்ஸ்பெக்டர் ஆனந்த நாயகி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கணவர் ராமலிங்கம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பைக்கில் இருந்து தவறி விழுந்து மனைவி பலி- கணவர் மற்றும் 2 குழந்தைகள் படுகாயம்..
