பூரிக்கட்டையால் தாக்கபட்டு மனைவி படுகாயம் – கணவருக்கு வலைவீச்சு..!

கோவை சரவணம்பட்டி, சிவசக்தி நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி அமுதவேணி ( வயது 33) இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. கதிர்வேல் குடிப்பழக்கம் உடையவர் .இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது .இந்த நிலையில் கதிர்வேல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவரது மனைவி கண்டித்தார் இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் பூரிக்கட்டையால் மனைவிஅமுதவேணியின் தலையில் தாக்கினார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அமுதவேணி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.