கார் மோதி கணவருடன் பைக்கில் சென்ற மனைவி பரிதாப பலி – 2 பேர் படுகாயம்..

கோவை அருளே உள்ள மலுமிச்சம்பட்டி ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 52 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி லட்சுமி (வயது 47 ) குழந்தை ஓவியாஸ்ரீ ( வயது 4) ஆகியோருடன் பைக்கில் கோவை – திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காங்கேயம் பாளையம் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்று பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மனைவி லட்சுமி பரிதாபமாக இறந்தார். காளீஸ்வரனும், ஓவியாஸ்ரீயும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக கார் ஓட்டி வந்த உடையார்பாளையம் அரவிந்த் குமார் (வயது 23) )மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.