ரூ.5 லட்சம் பணம் கேட்டு மனைவி சித்ரவதை. ஆசிரியர் மீது வழக்கு.

கோவை வெள்ளலூர் பட்டணம் ரோட்டில் உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் பிரேமா ( வயது 42) இவருக்கும் அதை ஊரை சேர்ந்த வேதாசலம் (வயது 48)என்பவருக்கும் 27- 1 – 2008 அன்று திருமணம் நடந்தது.இவரது கணவர் மங்களூரில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்குஅபிநய் ( வயது 16 ) கவுரவ் (வயது 13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் .இந்த நிலையில் வேதாசலம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாக கூறப்படுகிறது. இதை பிரேமா கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவியிடம் ரூ. 5 லட்சம் “அவுசிங் லோன் ” வாங்கி தருமாறு கோரி வேதாசலம் பிரேமாவை கொடுமைப்படுத்தினாராம் .இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வேதாச்சலம் மீது வரதட்சணை கொடுமை, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளில்வழக்கு பதிவு செய்துள்ளனர்.