கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் ராஜா ( வயது 43) கூலி தொழிலாளி. திருமணம் முடிந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி , 2 மகள்களுடன் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜாவின் மனைவி நேற்று ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த அவர் மனமுடைந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இந்த நிலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்த ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி 2-வது திருமணம்… அளவுக்கு அதிகமாக மது குடித்து கணவர் சாவு..
