போலி வீட்டு முகவரி கொடுத்து ஆதார் கார்டு வாங்கிய பெண் கைது..!

கோவைவடவள்ளி அருகே உள்ள நவாவூர் ,துர்கா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 86) மூத்த வழக்கறிஞர். இவரது வீட்டின் முகவரியை போலியாக கொடுத்து ஒரு பெண் ஆதார் கார்டு வாங்கி இருப்பதாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து செல்வபுரம், வடக்கு அவுசிங் யூனிட்டை  சேர்ந்த சண்முகம் மகள் பானுப்பிரியா ( வயது 31 )என்பவரை நேற்று கைது செய்தார். இவர் இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி முறைகேடாக சொத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது..