கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர், 4-வது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி விஜயா ( வயது 59) இவர் கடந்த 26 ஆம் தேதி அவரது வீட்டில் விளக்கு பற்ற வைத்தார். அப்போது திடீரென்று இவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது.. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மகள் சிந்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளக்கு ஏற்றும் போது சேலையில் தீப்பிடித்து பெண் கருகி சாவு..
