120 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, காடுவெட்டி பாளையம்பக்கம் உள்ள மோளகாளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகிய 8 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று மோள காளிபாளையத்தில் உள்ள 120 அடி ஆழம் கொண்ட தண்ணீரில் இல்லாத கிணற்றில் குறித்து பிரியா தற்கொலை செய்து கொண்டார். இவர் இதற்கு முன் 2 தடவை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது இது குறித்து இவரது தாயார் ஜோதிமணி கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் சண்முகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..