பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துபெண் தற்கொலை..

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம், கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 59) இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் . இது குறித்து அவரது மகன் பிரகாஷ் சூலூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.