அளவுக்கு அதிகமாக மது குடித்து பெண் மரணம்..

கோவை புலியகுளம், ஏரிமேடு, அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மனைவி புஷ்பா (வயது 55 ) இவரது கணவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .புஷ்பா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் இவர் குடிப்பழகத்துக்கு அடிமையானார். நேற்று காலையிலே மது குடிக்க ஆரம்பித்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சுயநினைவின்றி வீட்டில் மயங்கி கிடந்தார். இவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரது உடலை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.