ஸ்கூட்டர் மீது கார் மோதி பெண் பரிதாப பலி..

கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு ராகவேந்திரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் புலா ரஷி இவரது மனைவி சுகானா ( வயது 38) இவர் நேற்று ஸ்கூட்டரில் வெள்ள கிணறு ரோடு , சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சுகானா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த துடியலூர், ரயில் நிலைய ரோட்டை சேர்ந்த கருப்பசாமி ( வயது 44) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.