தூக்க மாத்திரைகள் தின்று உயிர் பிழைத்த பெண் தூக்கிட்டு தற்கொலை..

கோவை துடியலூர் ,என்.ஜி. ஜி ஓ.காலனி பக்கம் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் மோகன்ராஜ், இவரது மனைவி ஆஷா ( வயது 29)ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.குழந்தை இல்லையே என்ற மன வருத்தத்தில் 25- 2 -20 24 அன்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் .அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் உயிர் பிழைத்துக் கொண்டார்,இந்த நிலையில் கர்ப்பமான அவருக்கு கடந்த 10 நாளைக்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த ஆஷா அவரது வீட்டில் ஜன்னலில் சேலையை கட்டி தூக்கி தொங்கினார்.அவரை மீட்டுஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார்.இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.