கடன் தொல்லையால் மரத்தில் தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை..

பல்லடம் பக்கம் உள்ள இச்சிப்பட்டி தேவராயன்பாளையத்தில் சேர்ந்தவர் . இவரது மகன் சுரேஷ் ( வயது 27) பவர்லூம் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நண்பர்களிடமும், உறவினிடமும் அதிக படம் கடன் வாங்கி இருந்தார் . அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் சூலூர் அணைக்கட்டு பகுதியில் உள்ள கருவேல மரத்தில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்த அவரது தந்தை ராஜன் சூலூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..