தொழிலாளி தீக்குளித்து தற்கொலை – மனைவியும் உடல் கருகினார்..

கோவை மாவட்டம் வால்பாறை ஆயர்பாடி ,முதல் டிவிசனை சேர்ந்தவர் சபரிகிரி (வயது 41) கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி( வயது 37) இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளன.மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 10-ந் தேதி அவரது வீட்டில் டீசலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் அவரது உடலில் தீப்பிடித்தது .இதை பார்த்து அவரது மனைவி முத்துமாரி காப்பாற்ற முயன்றார் .அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சபரி கிரி நேற்று இறந்தார். இதுகுறித்து வால்பாறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்..