மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாப பலி..

கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவரது மகன் செல்வராஜ் ( வயது 27) பாணி பூரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் சுவிட்ச் போடும்போது மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். .இது குறித்து பேரூர் போலீசில் புகார்செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்.