ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.

கோவை ஏப் 29 கோவை சாய்பாபா காலனி, பெரியார் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் பாரத் கண்ணன் ( வயது 36) வெல்டிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஒரு துணிக்கடை வளாகத்தில் “வெல்டிங் ” வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்குபலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மனைவி பாண்டி செல்வி காட்டூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.