தொண்டையில் மீன் முள் சிக்கி தொழிலாளி பரிதாப பலி..

கோவை பீளமேடு வி. கே. ரோடு , தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகானி (வயது 48) உத்ரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்து தனியார் பம்ப் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவரது மனைவி மற்றும் குழந்தைகள் உத்தர பிரதேசத்தில் உள்ளனர். சம்பவத்தன்று இவர் மீன் வாங்கி வந்து சமையல் செய்து சாப்பிட்டார். அப்போது அவரது தொண்டையில் மீன் முள் சிக்கியது. இதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே மயங்கினார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..