காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாப பலி..

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு ,கெம்பனூர் சுற்றுக்குட்பட்ட அட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பேகன் (வயது 30 )இவர் இன்று காலையில் அந்த பகுதியில் காலைகடன் கழிக்க சென்றார். அப்போதுஅங்கு மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை இவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பேகன் அதே இடத்தில் பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அந்த பகுதியில் இன்று சாலை மறியல் நடந்தது.