மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம்,போக்சோவில் வாலிபர் கைது…

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். மாற்றுத்திறனாளியான இவர் கோவை வேலண்டிபாளையம் தடாகம் ரோட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். தினமும் இளம் பெண்ணின் அக்காவேலைக்கு சென்று விடுவார். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார் .அப்போது கேபிள் டி.வி. பணம் வசூலிக்க வரும் அதே பகுதி சேர்ந்த கணேஷ் பாலா (வயது 28) என்பருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது . நாளடைவில் இது காதலாக மாறியது. அவருக்கு திருமணம் ஆனதை மறைத்து அந்த இளம்பெண்ணுடன் பழகினார். மேலும் இளம்பெண் தனியாக இருக்கும்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக இளம்பெண் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இளம்பெண் தன்னை திருமணம் செய்யும்படி கணேஷ் பாலாவிடம் கூறினார். அப்போது தான் ஏற்கனவே திருமணமானவன் என்றும், உன்னை திருமணம் செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கோவை மத்திய பகுதி அனைத்து பெண்கள் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ் பாலாவைபோக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.