கோவை லாட்ஜில் அழகிகளை வைத்து விபச்சாரம். 2 பேர் கைது …

கோவை உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துஅழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக உக்கடம் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அன்பு நகர், அவுசி யூனிட் வெற்றிவேல்( வயது 33 )ஈச்சனாரி புனே காலனியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிக்கந்தர் பாட்சா, ராஜு பாய் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.