வால்பாறை 9 வது வார்டு பாரதிதாசன் நகரில் புதிய குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது…

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் பொதுமக்கள் நலன் கருதி சுமார் 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி மற்றும் 2000 பேர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் ஆகியவற்றை திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ .சுதாகர் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர் மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், வால்பாறை நகராட்சி துணைத் தலைவர் த.மா.ச. செந்தில்குமார் வால்பாறை நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், 9 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மகுடீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்சியில் வால்பாறை நகர துணை செயலாளர் சரவண பாண்டியன்,மாவட்டபிரதிநிதி டென்சிங்,வார்டு கழக செயலாளர் அண்ணாமலை, வார்டு கழக பிரதிநிதி நித்திய குமார்,ராதாகிருஷ்ணன் நிர்வாகிகள் அழகு, ராஜா,செந்தில், ரவி,ராம்குமார், பொன்னர்,விஜயன், ஜெய்சங்கர்,மூர்த்தி,மற்றும் பாரதிதாசன் நகர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்