கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி,உமா நாத் காலனியை சேர்ந்தவர்சக்திவேல்.இவரது மகன் அரவிந்த் குமார் ( வயது 26 )இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் அவரது மனைவி பெற்றோர்கள் வீட்டில் உள்ளார் .இந்த நிலையில் அரவிந்த் குமார் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகாட்டி பாலியல் பாலதாரம் செய்தாராம். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் அனைத்து மகளீர் போலீசார் விசாரணை நடத்தி அரவிந்த் குமாரை நேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம். வாலிபர் போக்சோவில் கைது…
