காதல் திருமணம் செய்த பெண் திடீர் சாவு …

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி சுமித்ரா ( வயது 29) இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 27 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 4 நாட்கள் கழித்து அவர்கள் வீடு திரும்பினார்கள்.நேற்று சுமித்ராவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்த அவரது தாயார் ராணி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..