கோவை சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ரூ58 லட்சம் மோசடி வழக்கில் தேடப்பட்ட பெண் ஊழியர் இன்று கைது….

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இங்கு பன்னிமடையை சேர்ந்த சைலஜா என்பவர் கணக்காளராக பணியாற்றிவந்தார்., இவர் ரூ 58 லட்சம் ஆலயநிதியை கையாடல் செய்ததாககவுண்டம்பாளையம் போலிசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டிருந்த போலிசார் தலைமறைவாக இருந்த சைலஜாவை இன்று கைது செய்தனர் .

சைலஜாகடந்த 11 ஆண்டுகளாக ஆலயத்தில்காணிக்கை பணத்தை கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.இவருக்கு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.