மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்றுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. கால்நடைத்துறை சார்பில் வெளியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காளைகளை பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாடு திமில் தெரியும் வகையில் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.