டாஸ்மாக் பாரில் மோதல். வாலிபருக்குஅரிவாள் வெட்டு. 4 பேர் கைது…

பொள்ளாச்சி ஆர். கோபாலபுரத்தில் டாஸ்மாக் பார் உள்ளது. இங்கு கேரள மாநிலம் ,சித்தூர் பகுதியைச் சேர்ந்த 5பேர் மது அருந்த சென்றனர் அப்போது அவர்களுக்குள்முன்விரோதம் காரணமாக வாய் தகராறுஏற்பட்டது.குடிபோதையில் ஒருவரை ஒருவர்தடியாலும் அரிவாளாலும் தாக்கிக் கொண்டனர்.இதில் நந்தகோபால் (வயது 26) என்பவருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்கு பதிவு செய்து கேரள மாநிலம்சித்தூர், வண்ணமடையச் சேர்ந்த அருள் பிரகாஷ் (வயது 32) சேது பிரசாத் (வயது 24) பூபதி (வயது 32) பழனிச்சாமி (வயது 33) ஆகியோரை கைது செய்தார்.இவர்கள் மீது கொலை முயற்சி தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.