கோவையில் காவலர் குடும்பத்தினரின் 40 கண்காட்சி கூடங்கள்- விற்பனை துவக்க விழா…

கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில்காவலர் குடும்பத்தினரின் 40 கண்காட்சி கூடங்கள் விற்பனை தொடக்க விழா நேற்று மாலைநடந்தது. விழாவுக்குகோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.மாநகராட்சி கமிஷனர் முன்னிலை வகித்தார்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் சிறப்புரையாற்றினார்.இந்த கண்காட்சி கூடத்தில் காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் கைவினைப் பொருட்கள்,ஆடை அலங்கார பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது இதை ஏராளமானவர்கள் வாங்கிச் சென்றனர் இதற்காக 40 விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.