இளம்பெண் திடீர் மாயம் – காதலனுடன் ஓட்டம்..?

கோவை சிவானந்தா காலனி காந்தி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி . இவரது மகள் நிஷாகா (வயது 18) நேற்று காலையில் பாத்ரூம் சென்றவர் திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் செல்லக்கொடி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்தப் பெண் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் எங்கோ மாயமாகிவிட்டதாக தெரிய வந்தது. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.