போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது.!!

கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் நேற்று கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்கு போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய ஒருவரை மடக்கி பிடித்தனர்.அவரிடம் சோதனை செய்தபோது 75 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் .விசாரணையில் அவர் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர், சக்தி கார்டனை சேர்ந்த வீரமணிகண்டன் ( வயது 27 )என்பது தெரியவந்தது செல்போனும் ,போதை மாத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக பாலன் என்ற சொரி பாலன், பூபதி, முகுந்த் ,கோவிந்த் ராவ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.